Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM

திருமானூரில் 11.3 செ.மீட்டர் மழை பதிவு :

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது.

இதில், திருமானூர் பகுதியில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக தெருக்களில் தாழ்வான பகுதி களிலும், வயல்களிலும் தண்ணீர் தேங்கியது.

வாய்க்கால்கள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டு, காலை 5 மணிக்கு சரிசெய்யப்பட்டது.

தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட் டது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் திருமானூரில் 11.3 செ.மீ, செந்துறையில் 4.6 செ.மீ, அரிய லூரில் 2 செ.மீ மழை பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x