மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா நிவாரணம் :

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா நிவாரணம் :

Published on

வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் அடையாள அட்டைகள் உள்ள மூன்றாம் பாலினத்தவர் களுக்கு கரோனா நிவாரணத் தொகையாக தலா ரூ.2,000 வழங்க அரசு உத்தர விட்டுள்ளது.

எனவே, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்களது ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பி-பிளாக், 4-வது மாடி, வேலூர் 632-009 என்ற முகவரியில் கொடுத்து, அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரி வித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in