Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : தி.மலை மாவட்ட ஆட்சியர் தகவல்

சமூகத்தில் வீரத்துடனும் பல்வேறு துறைகள் மற்றும் துணிச்சலுடனும் சாதனை செய்த பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, 2021-ம் ஆண்டுக்கு கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக, பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம் கிடையாது. விருதுக்காக விண்ணப்பங்களை சம்பந்தப்பட்டவர்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். அதில், 2021-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை–84” என்ற முகவரிக்கு வரும் 25-ம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் 04175-233169 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x