கல்வராயன்மலையில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு :

கல்வராயன்மலையில் மா, புளி செடிகளை நட்டு நாற்றங்கால் பணியை தொடங்கி வைக்கும் ஆட்சியர் பி.என்.தர் .
கல்வராயன்மலையில் மா, புளி செடிகளை நட்டு நாற்றங்கால் பணியை தொடங்கி வைக்கும் ஆட்சியர் பி.என்.தர் .
Updated on
1 min read

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் கரியாலூர் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று ஆய்வு செய்தார். கல்வராயன் மலை கரியாலூர் கிராமத்தில் உள்ள சுற்றுலா பகுதியான சிறுவர் பூங்காவை பார்வையிட்டார்.

அப்பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், இப்பகுதியை மேம்படுத்த சுற்றுலாத் துறையின் வாயிலாக கூடுதல் நிதிகளை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நாற்றங்கால் அமைக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து நாற்றங்கால் பணிகளை தொடக்கி வைத்தார்.

கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், வட்டாட்சியர் ஆனந்தசயனம், ஒன்றிய உதவி பொறியாளர்கள் அருண்பிரசாத், அருண்ராஜா மற்றும் அசோக்காந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in