Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

சுதந்திர தின விருது பெற விண்ணப்பிக்கலாம் :

தேனி

பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சமூக சேவகர்கள் சுதந்திர தின விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

இந்த விருதுக்கு விண் ணப்பிப்போர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண் டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் பணி யாற்றியிருக்க வேண்டும்.

தகுதியுடையோர் தேனி ஆட்சியர் அலுவலகம் 3-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிய படிவத்தைப் பெற்று வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x