Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

கார் மோதி தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு :

வடமதுரை அருகே சாலை யோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் இருவர் உயிரி ழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே குண்டாம் பட்டியைச் சேர்ந்தவர் பழனிச் சாமி(61), ச.புதூரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(43). இவர்கள் தண்ணீர்பந்தம்பட்டி கிராமத்தில் உள்ள உரம் தயாரிக்கும் கம் பெனியில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவுப் பணி முடிந்து தண்ணீர் பந்தம்பட்டி சாலை யோரம் நின்றிருந்தனர். அப் போது பாலகுமார் என்பவர் ஓட்டிவந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் பழனிச்சாமி இறந்தார். படுகாயமடைந்த சந்திரசேகரன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உயி ரிழந்தார்.

இதுகுறித்து எரியோடு போலீ ஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x