

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடைபெற்றது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒரு வரும் ஆண்டாளின் தந்தையுமான பெரியாழ்வாரின் ஜென்ம நட்சத்திரமான (ஆனி- சுவாதி) நேற்று, கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் பெரியாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், பெரியாழ்வார் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்துக்குச் சென்றார். அங்கு பெரியாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கோயில் வளாகத்தில் வலம் வந்து சன்னதியை வந்தடைந்தார்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.