Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM
திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி, ஆம்பூர் மற்றும் நாட்றாம்பள்ளி பகுதிகளில் இருந்து ஆந்திராவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப் படுவதாக வந்த தகவலின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப்பிரிவு காவல் துறையினர் வாணியம்பாடி - நாட் றாம்பள்ளி பிரதான சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தெரியவந்தது. இதையடுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் பெருமாள் (40), அவருடன் இருந்த சஞ்சீவி (24) ஆகியோரை கைது செய்து, 4 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து (35) என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த பிச்சை முத்துவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT