

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று (21-ம் தேதி) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று (21-ம் தேதி) காலை 9 மணி முதல் 11 மணி வரை சக்தி நகர், அந்தோணிபுரம், டி.எம்.ரோடு, முல்லாக்காடு, எம்.ஜி ரோடு, சட்டக்கல்லூரி ரோடு, லட்சுமி சுந்தர் நகர், மிட்டா கண்ணன் தெரு, வெங்கடாஜலம் காலனி, வால்மீகி தெரு, ஜோதி மெயின் ரோடு, வித்யா நகர், புலிக்குத்தி தெரு, ராம்பிள்ளை தெரு, வடக்கு முனியப்பன் கோயில், அம்மாள் ஏரி ரோடு 2-வது குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளிலும், முற்பகல் 11 முதல் 1 மணி வரை கே.எஸ்.வி நகர், புது ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, சாமிநாதபுரம் மெயின் ரோடு, வன்னியர் நகர், ஆத்துக்காடு, ராம் நகர், கன்னாரத் தெரு, தில்லை நகர், நாராயண நகர், அண்ணா நகர், அம்பாயிராம் சாவடி தெரு, ரங்கன் தெரு, திருவேங்கடம் தெரு, கலைஞர் நகர், எஸ்.ஆர்.வி நகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
மேலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை ரெட்டிப்பட்டி, பிள்ளையார் நகர், முல்லை நகர், சின்ன எழுத்துக்காரத் தெரு, பிருந்தாவனம் முன்றாவது குறுக்குத் தெரு, கண்ணன் காடு, மார்க்கபந்து தெரு, மார்க்கெட் தெரு, அண்ணா நகர், குப்பை மேடு, புதுத்தெரு, கர்ணா நகர், நெய் மண்டி தெரு, மெசின் கிணறு தெரு, மகப்பூப் தெரு, எருமாபாளையம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாமும், அம்மாப்பேட்டை பாவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.