Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM

அரக்கோணத்தில் - மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது :

அரக்கோணத்தில் மூதாட்டியை தாக்கி தங்க நகைகளை பறித்துச்சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கணேஷ்நகரைச் சேர்ந்தவர் எத்திராஜூலு (76). ஓய்வுபெற்ற காவலர். இவரது மனைவி சுசிலா (70). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் எத்திராஜூலு உயிரிழந்துவிட்டார். சுசிலா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சுசிலா தனது வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், சுசிலாவை தாக்கி அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி மற்றும் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் என 4 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

இது குறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் சுசிலா புகார் அளித்தார். அதன் பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, மூதாட்டியை தாக்கி தங்க நகையை பறித்துச்சென்றது சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாலாஜி (28) என்பதும், அவர் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, தணிகை போளூர் பகுதிக்கு சென்ற நகர காவல் துறையினர் அங்கு மறைந்திருந்த பாலாஜியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 பவுன் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x