Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (20-ம் தேதி) காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று 48 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், 3,347 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை ஜாகீர் அம்மாப்பாளையம் அண்ணா நகர், ஆசாத் நகர், ஆண்டிப்பட்டி, அரிசிப்பாளையம் மெயின் ரோடு, தென் அழகாபுரம், சின்னக் கொல்லப்பட்டி ஜீவா தெரு, கோவிந்தன் தெரு, மேட்டு கண்ணன் தெரு, என்ஜிஜிஓ காலனி, குட்டி வைத்தியர் தெரு, புதுத்தெரு, கிருஷ்ணா நகர், புலிகுத்தி தெரு, புட்டா மெசின் ரோடு, மேற்கு முனியப்பன் கோயில் தெரு, கல்யாண கோயில் தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கவுள்ளது.
மேலும், பிற்பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ரெட்டியூர் பெருமாள் மலை அடிவாரம், அரியாகவுண்டம்பட்டி, மெய்யன் தெரு, பள்ளப்பட்டி விநாயக கார்டன், ஏ.டி.சி.நகர், மகேந்திரபுரி, சேகர் தெரு, செவ்வாய்ப்பேட்டை கண்ணார தெரு, வாசகி சாலை, சத்திய மூர்த்தி தெரு, பெருமாள் கோயில் மேடு, குமரன் தெரு, மூங்கபாடி தெரு, அம்பேத்கர் நகர், ஒல்லிக்குட்டான் வீதி, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது.
நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை காமநாயக்கன்பட்டி, ஜெயா நகர், சொட்டையன் தெரு, சின்ன எழுத்துக்காரர் தெரு, ஆலமரக்காடு, அய்யந்திருமாளிகை, நாராயண பிள்ளை தெரு, மார்க்கெட் தெரு, சக்தி நகர், ராஜா பிள்ளைகாடு, தியாகி அருணாச்சலம் தெரு, வஉசி நகர், நெய்மண்டி தெரு, குஞ்சு மாரியம்மன் கோயில் தெரு, தார்பாய்க்காடு, குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT