Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM

இளைஞர் கொலை :

சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலா புரத்தைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி. இவருக்கு 2 மனைவிகள். சொத்து தொடர்பாக முதல் மனைவி குடும்பத்துக்கும், இரண்டாம் மனைவி குடும்பத்துக்கும் பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில், முதல் மனைவியின் மகன் அழகிய நம்பிராஜன் (36) திருமலாபுரம் அரசு பள்ளி அருகில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, ராமர்பாண்டியின் இரண்டாம் மனைவியின் தம்பி மு.அழகிய நம்பி (42) அங்கு வந்துள்ளார். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மு.அழகியநம்பி அரிவாளால் அழகிய நம்பிராஜனை தாக்கியுள்ளார். இதனால் அவர், அருகில் கிடந்த கல்லை எடுத்து மு.அழகியநம்பியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மு.அழகிய நம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அழகியநம்பிராஜன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x