Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM

கே.வி.குப்பம் அருகே - தண்டவாளத்தில் விரிசல் :

கே.வி.குப்பம் அருகே தண்ட வாளத்தில் விரிசல் காரணமாக பிருந்தாவன் விரைவு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற பிருந்தாவன் விரைவு ரயில் நேற்று காலை 9.50 மணியளவில் காட்பாடி அடுத்த காவனூர் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பெங்களூரு மார்க்கத்தில் கே.வி.குப்பம் அருகே தண்டவாளத்தில் விரிசல் இருக்கும் தகவலை அடுத்து பிருந்தாவன் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

மேலும், காட்பாடியில் இருந்து பொறியியல் பிரிவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழுவினர் விரைந்து சென்று விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை துண்டித்து மீண்டும் கிளாம்ப் மூலம் இணைத்தனர்.

அதன் பிறகே ரயில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்து சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு பிருந்தாவன் விரைவு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x