Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எஸ்.விசாகன் பொறுப்பேற்பு :

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எஸ்.விசாகன் பொறுப்பேற்றார்.

மதுரை மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த எஸ்.விசாகன், இடமாறுதல் செய்யப்பட்டு தற்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் அவர் நேற்று பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வேன். மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (நிதி மேலாண்மை) படித்துள்ள எஸ்.விசாகன், 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். அதன் பின் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரிந்தார். இதனையடுத்து தொழில் துறை, கலைப் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x