லாரி ஓட்டுநர் கொலை :

லாரி ஓட்டுநர் கொலை  :
Updated on
1 min read

செங்கத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த மைத்துனரை அண்ணி வெட்டிக் கொலை செய்துள்ளார்.

தி.மலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன்பேட்டை பகுதி யில் வசிப்பவர் லாரி ஓட்டுநர் செல்வம். இவரது தம்பியான லாரி ஓட்டுநர் ராஜா(48), மனைவி பிரிந்து சென்றபிறகு, அண்ணன் வீட்டிலேயே தங்கி உள்ளார். இந்நிலையில் பணி காரணமாக செல்வம் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில், அண்ணி பராசக்திக்கு ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பராசக்தி பலமுறை எச்சரித்தும், அவரது செயல் தொடர்ந்துள்ளது. மேலும், பராசக்தியிடம் நேற்று முன் தினம் இரவு ராஜா பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளார். இதனால்ஆத்திரமடைந்த பராசக்தி, ராஜாவை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். இது குறித்து செங்கம் காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து பராசக்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in