Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM

ஈரோட்டில் குறையும் கரோனா தொற்று :

ஈரோடு/ சேலம்

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஈரோட்டில் கரோனா தொற்றால் நேற்று 1123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1733 பேர் குணமடைந்த நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் 9962 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலத்தில் 693 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் நேற்று 693 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று 1,456 நபர்கள் குணமடைந்தனர். 18 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில், 6,003 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x