Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

ஊருக்குள் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு :

கோவை: கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்துவயல் கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று காலை இரு ஆண் யானைகள் நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், கால்நடை மருத்துவர்கள் முட்டத்துவயல் பகுதிக்கு விரைந்து சென்றனர். டிரோன் கேமராவை பறக்கவிட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்த இரு யானைகளையும், வனத்துறையினர் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குள் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “கடந்த 14-ம் தேதி இரவு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட இரு யானைகளும் தாணிகண்டி பழங்குடியினர் குடியிருப்பு வழியாக மீண்டும் முட்டத்துவயல் குளத்துக்கு வந்தன. பல மணி நேரம் போராடி வனத்துக்குள் விரட்டப்பட்டன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x