Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM
புதுச்சேரியில் புதிதாக 355 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்டிருக்கும் தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் 9,017 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 265, காரைக்கால் - 77, ஏனாம் - 8, மாஹே - 5 என மொத்தம் 355 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை.இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,696 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.50 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 192 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவ மனைகளில் 741 பேரும், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் 3,927 பேரும் என மொத்தம் 4,668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக 629 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 828 (94.38 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 11 லட்சத்து 81 ஆயிரத்து 176 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 10 லட்சத்து 15 ஆயிரத்து 787 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 164 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT