

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5.81 கோடிக்கு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முன்தினம் காலை முதல் அமலுக்கு வந்தது. புதிய ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டது. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானம் விற்பனை நேற்று முன்தினம் நடை பெற்றது. ஒரு மாதத்துக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டன.
காவல் துறையினர் பாதுகாப்பு
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 116 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு, முதல் நாளான நேற்று முன்தினம் ரூ.3.41 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கிய அரக் கோணம் மண்டலத்தில் மொத்தம் 88 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு, முதல் நாளில் ரூ.2.41 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் ஒரே நாளில் ரூ.5.81 கோடிக்கு மதுபாட்டில்கள் விற் பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.