ஏரியில் கழிவு நீர் கொட்ட எதிர்ப்பு பொதுமக்கள் மறியல் :

ஏரியில் கழிவு நீர் கொட்ட எதிர்ப்பு பொதுமக்கள் மறியல் :
Updated on
1 min read

ராசிபுரம் அருகே குறுக்குபுறத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியினர் வசதிக்காக இரு பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கழிப்பிடத்தில் நேற்று எடுக்கப்பட்ட கழிவு நீர், லாரி மூலம் நொச்சிப்பட்டி ஏரியில் கொட்ட கொண்டு செல்லப்பட்டது.

இதையறிந்த நொச்சிப்பட்டி கிராம மக்கள், கழிவு நீர் ஏரியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீர் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in