Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM

மதுக்கடத்தலை தடுக்க மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை :

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால், ஊரடங்கு விதிகளின்படி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அதேநேரம், அருகிலுள்ள திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுகிறதா என திண்டுக்கல் மாவட்டத்தை ஒட்டியுள்ள கரூர் மாவட்ட எல்லையான டி.கூடலூர், ஆர்.வெள்ளோடு, திருச்சி மாவட்டத்தை ஒட்டியுள்ள கரூர் மாவட்ட எல்லையான மாயனூர், பேட்டைவாய்த்தலை, ஆர்.டி.மலை, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் நேற்று வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இதில், வழக்கமான சோதனைச் சாவடிகளுடன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் கூடுதலாக 3 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x