Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM

மான்களை வேட்டையாடிய இளைஞர் கைது :

திருவண்ணாமலை அருகே 3 மான்களை வேட்டையாடிய இளைஞரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தி.மலை அடுத்த கொண்டம் கிராமத்தில் வனத் துறையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து, அவர் வைத்திருந்த மூட்டையை சோதனையிட்டனர். அதில், 3 மான்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், செங்கத்தைச் சேர்ந்த சஞ்சய்(20) என்பதும், சொரகொளத்தூர் மற்றும் பாடகம் வனப் பகுதியில் மான்களை வேட்டையாடி இறைச்சியாக்கி விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது. இது குறித்து வனத்துறை யினர் வழக்குப்பதிவு செய்து சஞ்சயை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் வேட்டையாடப்பட்ட மான்களின் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x