காரில் மது கடத்திய இருவர் கைது 1,020 மது பாட்டில்கள் பறிமுதல் :

காரில் மது கடத்திய இருவர் கைது 1,020 மது பாட்டில்கள் பறிமுதல் :
Updated on
1 min read

ராசிபுரம் அருகே மல்லூரில் வெண்ணந்தூர் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சோம்நாத்புரம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (28) மற்றும் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த பூபேந்திரன் (45) ஆகியோர் காரில் இருந்தனர்.

மேலும், ஓசூரில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு மதுபான பாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இரு வரையும் கைது செய்த போலீஸார் காரில் இருந்த 1,020 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in