Published : 14 Jun 2021 03:14 AM
Last Updated : 14 Jun 2021 03:14 AM

சேத்துப்பட்டில் நிவாரணம் வழங்கல் :

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு லூர்து நகர், நிர்மலா நகரில் வசிக்கும் மக்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் ஜான்சன் தலைமை வகித்தார். நாட்டாண்மைகள் அல்போன்ஸ், குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேத்யூ வரவேற்றார்.

ஆக் ஷன் எய்ட் சர்வதேச தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்தர் கலந்து கொண்டு, 400 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், முகக்கவசம், கிருமி நாசினி போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x