Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் இன்று - ரேஷன்கார்டுதாரர்களுக்கு 4 கிலோ அரிசி வழங்கும் திட்டம் : உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கரூர்

கரூர் மாவட்ட திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 3,19,816 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வீதம் 1,279 டன் அரிசி வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 13) நடைபெறுகிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி க.பரமத்தியில் மாலை 3.30 மணி, கரூர் தொகுதியில் பசுபதிபாளையம் மெயின்ரோட்டில் மாலை 4 மணி, கிருஷ்ணராயபுரத்தில் மாலை 4.30 மணி, குளித்தலை மணத்தட்டையில் மாலை 5 மணிக்கு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பங்கேற்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைக் கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x