கிணற்றில் பெண் செவிலியர் உடல் மீட்பு :

கிணற்றில் பெண் செவிலியர் உடல் மீட்பு :
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள கிணற்றில் பெண் உடல் மிதப்பதை பொதுமக்கள் பார்த்தனர். இதுகுறித்து கண்ணமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர், கிணற்றில் இருந்து பெண்ணின் உடலை மீட்டனர்.

விசாரணையில், உயிரிழந்தவர் வண்ணாங்குளம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த சவுந்தர்யா(25) என்பதும், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், வண்ணாங்குளத்தில் தங்கி பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து கண்ணமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in