Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
கோவை வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் எல்லை மாரியம்மன் கோயில் அருகே வருவாய் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய அனுமதி இல்லாமல் 3 யுனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி ஓட்டுநரான கோவை செட்டிபாளையம் பாரதி நகரை சேர்ந்த ஜி.விக்னேஷ் (23) என்பவரை பிடித்து, போத்தனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT