Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
சோதனை என்ற பெயரில் நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் பூக்கடை காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னை பூக்கடையில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. அண்மையில் இந்த கடைகளுக்குச் சென்று பூக்கடையைச் சேர்ந்த 2 போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
அங்கிருந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடமிருந்து ரூ.5 லட்சத்தை விசாரணை என்ற பெயரில் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், அதன் பின் எந்த விசாரணையும் நடத்தவில்லை. பறிமுதல் செய்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.
நகைக்கடை உரிமையாளர் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பூக்கடை காவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பூக்கடை காவலர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT