Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM
புதுச்சேரி: புதுச்சேரி கோவிந்தசாலை கண் டாக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி அரசு மகளிர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். அப்போது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அவரது வயதை பரிசோதித்ததில் 17 வயது சிறுமி என்பது உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்தியதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள ஜெனிபர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜெயமூர்த்தி (24) மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT