Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரி - எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான அதிக வரி விதிப்புகளை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன்படி மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சித் தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் கீழவெளி வீதி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, செயலாளர் சிக்கந்தர், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத் தலைவி கதிஜா பீவி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வில்லாபுரம் உட்பட பல்வேறு இடங்களில் நிர்வாகிகள் வீடுகளின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்டி பிஐ நகரத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சபீர், நகரச் செயலாளர் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரப் பொருளாளர் சபரிதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் பேகம்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் அப்துல் லத்தீப் தலைமை வகித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் நடந்த ஆர்ப்பாட் டத்துக்கு எஸ்டிபிஐ நகர் செய லாளர் நஜிமுதீன் தலைமை வகி த்தார். மாவட்டத் தலைவர் நூர்ஜி யாவுதீன், நகர் தலைவர் சகுபர் சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x