Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநகர் பொதுச் செயலாளர் க.ஹயாத் முகம்மது தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாளையங் கோட்டை, டவுன், பேட்டை, சுத்தமல்லி, தாழையூத்து, பர்கிட்மாநகரம், மானூர், சீதைகுறிச்சி, தெற்குபட்டி, குறிச்சிகுளம் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கரன்கோவிலில் நகரச் செயலாளர் சேக், துணை செய லாளர் பீர் மைதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x