Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
புதுச்சேரியில் கரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரியில் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இத்தொகை இரு தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கரோனா நிவாரண முதல்கட்ட தொகையாக ரூ. 1,500 பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க பலரும் குவிந்தனர். இதனால் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பல இடங்களில் மக்கள் நெரிசலை போலீஸார் கட்டுப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT