Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் கரோனா தொற்று பாதித்து, வீட்டில் சிகிச்சை பெறுவோருடன் மன்னர் கல்லூரி சுழற் சங்க மாணவர்கள் மொபைல் போனில் பேசி கண்காணிக்கின்றனர். பரிசோதனை, ஆக்சிஜன் படுக்கை, மருத்துவரின் பரிந்துரையின்படி மருந்து, மாத்திரைகளை வீட்டுக்கே சென்று வழங்கும் பணிகளையும் அவர்கள் செய்கின்றனர்.
கோட்டாட்சியர் சவுந்தர்யா, மருத்துவர் சிவக்குமார் வழிகாட்டுதலின்படி இப்பணியை மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர். பேராசிரியர் சுரேஷ்பாபு, சுழற்சங்க தலைவர் ப்ரீத்தி, செயலர் சுகிதா, பொறியாளர் யோகராஜன் ராஜவேல் ஆகியோரும் இணைந்து செயல்படுகின்றனர் என திருமங்கலம் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT