Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் - இயல்பு நிலைக்கு திரும்பும் மதுரை :

மதுரை

மதுரையில் கடந்த ஒரு வாரமாக புதிய கரோனா தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம் பித்துள்ளனர்.

கரோனா இரண்டாவது அலை பரவலில் மதுரை அதிகம் பாதிக் கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் தவிக்கும் அளவுக்கு தொற்று பரவல் அதிகரித்தது. உயிரிழப்பும் தினசரி 15 முதல் 18 இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் தினமும் 80-க்கும் மேற்பட்டோர் இதனால் இறந்ததாக தெரிவிக்கின்றனர்.

மதுரையின் இரண்டு பெரிய மயானங்களில் 24 மணி நேரமும் கரோனாவில் உயிரிழந்தவர்களை எரித்தாலும் உடல்களை எரிக்க நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

கடந்த ஒரு வாரமாக அமைச்சர்கள், எம்பி, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து எடுத்த கூட்டு முயற் சியால் பரவல் குறையத் தொடங்கி யது. குறிப்பாக மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருப் போரைக் கட்டுப்படுத்தினர். ஒரு வர் மட்டுமே நோயாளிகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

தொற்று ஏற்பட்ட பகுதிகளிலி ருந்து நோயாளிகள் வெளி யேறாதவாறு கண்காணித்து, அவர்களுக்கு தேவையான பொருட்களை வீடு தேடிச்சென்று கொடுத்தனர்.

இதனால் மதுரையில் 1500-ஐ தாண்டிய தொற்று தற்போது 300 முதல் 400 ஆக குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மதுரை மாவட் டத்தில் கரோனா பாதிப்பு 365 ஆக குறைந்தது.

நோயாளிகள் தடையில்லாமல் சென்று சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்பு மட்டும் இன்னும் குறையவில்லை.

இதுவரை மதுரை மாவட்டத்தில் 68,648 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 38,025 பேர் குணமடைந்துள்ளனர். 9,671 பேர் சிகிச்சையில் உள்ளனர். 988 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது தொற்று வேகமாக குறைவதால் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இன்னும் ஓரிரு வாரத்தில் பாதிப்பு நூறுக்குக் கீழ் வர வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதி காரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x