Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் :

திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே  ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி, சாமநத்தம் பகுதியில் ஏராளமான நாட்டுப்புறக் கலைஞர்கள் வசிக்கின்றனர். தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதை அறிந்து மதுரை ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் உதவி செய்ய முன்வந்தனர்.

இதன்படி ஒருங்கிணைப்பாளர் தத் பிரபானந்தர் சுவாமிகள் தலைமையில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் ஆகிய 146 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x