Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மாநகராட்சியின் புதிய ஆணையராக டாக்டர் கே.பி.கார்த் திகேயன் நியமிக்கப்பட் டுள்ளார்.
2019-ல் மதுரை மாநகராட்சி ஆணையராக ச.விசாகன் நியமிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த இவரது பணிக்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், தமுக்கம் மைதானத்தில் பல்நோக்கு வணிக வளாகம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு கரோனா முதல் அலை பரவியபோது மாநகராட்சியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற் கொண்டார். மேலும் மாநக ராட்சியில் 80 சதவீத வரிவசூல் செய்ய நடவடிக்கை எடுத்தார். தற்போது அவர் பணியிட மாற்றப்பட்டு, மாநகராட்சி புதிய ஆணையராக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநராக இருந்த டாக்டர் கே.பி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT