Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
கரோனா வார்டு ஐசியூ மூத்த மருத்துவ நிபுணர் வி.விஜய் ஆனந்த் கூறியதாவது திண்டுக்கல்லைச் சேர்ந்த 36 வயது கர்ப்பிணி கரோனாவில் 95% நுரையீரல் பாதித்து வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தோம். வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூ வார்டில் 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கப்பட்டது.
தற்போது தாயும், சேயும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்திலே முதல் முறையாக கரோனா தொற்றில் 95% நுரையீரல் பாதிப்புடன் இருந்த கர்ப்பிணி குணமடைந்தது இதுவே முதல் முறை. 60%, 70% பாதிப்புடன் மருத்துவ மனைக்கு வரும் கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தி அனுப்புகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT