Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

அதிமுக பிரமுகர் பேக்கரியை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது :

வாடிப்பட்டி அருகே சில நாட்களுக்கு முன்பு நடந்த நெல் கொள்முதல் நிலையத் திறப்பு விழாவின்போது, சோனை என்பவரின் மகன் அசோக்குமாருக்கும், திமுக இளைஞரணி நிர்வாகி பொட்டுலுபட்டி அசோக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதன் எதிரொலியாக கடந்த 5-ம் தேதி சிலர் வாடிப்பட்டியிலுள்ள சோனையின் மற்றொரு மகன் இளங்கோவனின் பேக்கரியை சூறையாடினர்.

இது தொடர்பாக வாடிப்பட்டி ஆய்வாளர் ஜாஸ்மின் வழக்குப்பதிந்து பொட்டுலுப்பட்டி அசோக்குமார்(28), அவரது ஆதரவாளர்கள் கரட்டுப்பட்டி அறிவுசெல்வம் (19), சோழவந்தான் பெரியமருது (24)ஆகியோரைக் கைது செய்தார். இந்நிலையில் சூரியபிரகாஷ், கார்த்திக் ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x