Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

வாழைத்தார்களை ஏலத்தில் விற்பனை செய்யஅந்தியூர், சத்தியமங்கலம், கோபியில் மையம் :

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராகவுள்ள வாழைத்தார்களை விற்பனை செய்வதற்காக அந்தியூர், சத்தியமங்கலம், கோபி ஆகிய மூன்று இடங்களில் ஏல மையங்கள் செயல்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள வாழைத்தார்களை விற்பனை செய்ய மூன்று இடங்களில் ஏல மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள மையத்தில் 12-ம் தேதி முதல், ஒவ்வொரு சனிக்கிழமையும், சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 11-ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைதோறும், கோபியில் 19-ம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் வாழைத்தார்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்.

விவசாயிகள் தங்கள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவரத்தினை ஒரு நாள் முன்னதாக அந்தியூர் (புதுப்பாளையம்) (9942712144), சத்தியமங்கலம் (9442438188) கோபி (9976253949) மையங்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x