Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
தூய்மைப் பணிகளுக்காக வாங்கப்பட்ட உபகரணங்கள் முறைகேடாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகத்தால் வாங்கப்பட்ட மண் வெட்டிகள், குப்பைக் கூடைகள், கடப்பாரைகள், புகை அடிக்கும் இயந்திரங்கள், குடிநீர் குழாய் இரும்பு பைப்புகள் மற்றும் தூய்மைப் பணிகளுக்கான உபகரணங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தூய்மைப் பணியாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.
இவ்விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் உரிய விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT