Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

மண் மாதிரி சேகரிக்கும் பணி :

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மண் வளம் சார்ந்த உர பரிந்துரை மேற்கொள்ளும் பொருட்டு விவசாய நிலங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் சு.ரேவதி கூறும்போது, “தீனம்பா ளையம் கிராமத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியை வேளாண் துறை உயரதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நடப்பாண்டில் தொண்டாமுத் தூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 22கிராமங்களில் 600 எண்கள் அளவில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு மண் வள அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x