Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

கரோனா தொற்றுக்கு செவிலியர் உயிரிழப்பு :

வேலூர்: வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனை செவிலியர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ஆரோன் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி சாந்தகுமாரி (51). வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கரோனா சிகிச்சை வார்டில் பணியாற்றி வந்த சாந்தகுமாரிக்கு கடந்த மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில், தொற்று உறுதியானதால் கடந்த மாதம் 14-ம் தேதி அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த சாந்தக்குமாரி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது உருவப்படத்துக்கு பென்ட் லெண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x