Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

வரும் 29-ம் தேதி அஞ்சல் குறை தீர்வு முகாம் :

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஞ்சல் குறை தீர்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் பீ.ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி காலை 11 மணியளவில் ‘அஞ்சல் குறை தீர்வு முகாம்’ நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் திருப்பத்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் உள்ள அஞ்சல் சேவை குறித்த தங்களது புகார் (பதிவுத்தபால், விரைவுத்தபால், மணியார்டர், சேமிப்பு கணக்குகள், சேமிப்பு பத்திரங்கள், சாதாரண தபால் பட்டுவாடா, அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு) குறித்த முழு விவரங்களுடன் ‘அஞ்சலங்களின் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பத்தூர் கோட்டம், திருப்பத்தூர் 635601’ என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 21-ம் தேதிக்குள் அஞ்சலகங்களின் கோட்ட அலுவலகத்தில் அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல, அஞ்சல் குறை தீர்வு முகாமிலும் கலந்து கொள்ள வேண்டும்’’. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x