Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM
வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும்தேயிலை எஸ்டேட் தொழிலாளர் களின் குடும்பத்துக்கு, அந்தந்த எஸ்டேட் நிர்வாகம் சார்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமீபகாலமாக காட்டு யானை தாக்கி, தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். யானைகள்நடமாட்டம் குறித்து, அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் முன் கூட்டியே வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு 60 வயதுடைய இரவுக் காவலாளி காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளார். இரவுக் காவல் பணிக்கு முதியவர்களை பணி அமர்த்துவதை தவிர்த்து, இளவயதுடைய காவலாளிகளை எஸ்டேட் நிர்வாகங்கள் நியமிக்க வேண்டும்.
வன விலங்கு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்தால், அவர்களுக்கு அந்தந்த எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
வால்பாறை பகுதியில் மனித - வன விலங்கு மோதலைத் தவிர்க்க வனத் துறையினருடன், எஸ்டேட் நிர்வாகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT