Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM
கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரயில் மூலம் ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. ரூர்கேலாவில் இருந்து 2 டேங்கர் களில் நிரப்பப்பட்ட 32.38 மெட்ரிக் டன் திரவநிலை ஆக்சிஜன், கோவை மதுக்கரை ரயில்நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தது.பின்னர்,கோவையில் தேவை அதிகம் உள்ள மருத்துவமனைகளுக்கும், ஆக்சிஜன் விநியோக மையங்களுக்கும் போலீஸார் பாதுகாப்புடன், வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள் மூலம் லாரிகள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதுவரை மொத்தம் 333.02 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கோவை வந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT