Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் :

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று (8-ம் தேதி) காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கிறது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தெற்கு பிள்ளையார் கோயில் மாணிக்கவாசகம் தெரு, அண்ணாநகர் நரசோதிப்பட்டி, இந்திரா நகர் பெரியகொல்லப்பட்டி, ஜாகிர் ரெட்டிப்பட்டி பார்வதிபுரம் பகுதிகளிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தெற்கு பிள்ளையார் கோயில் ராமநாதபுரம், செவ்வாய்பேட்டை குப்புசாமி தெரு, சின்னத்திருப்பதி காமராஜர் நகர், ஜாகிர் அம்மாபாளையம் காளியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை சோளம்பள்ளம், முல்லை நகர், மார்கபந்து தெரு, தென் அழகாபுரம், வன்னியர் நகர், வின்சென்ட் செரி ரோடு, மன்னார்பாளையம் பிரிவு ரோடு, டி.கே.வி ரோடு, பாலாஜி நகர், கஸ்தூரி பாய் தெரு, பாண்டு நகர், சஞ்சீவிராயன் பேட்டை பள்ளி, அம்மாள் ஏரி ரோடு 3-வது குறுக்குத் தெரு, கந்தம்பட்டி காலனி, சாமிநாதபுரம் மெயின் ரோடு, பிஜிஆர் லைன் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x