‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் - விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் :

'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில்' ரூ.7 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை  அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்.
'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில்' ரூ.7 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் `உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் ரூ.7 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, விக்கிரவாண்டி உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்பி கவுதமசிகாமணி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவகுமார், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், எஸ்பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு 329 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதலவர் அறிவித்திருந்தார்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் அடங்கிய 329 மனுக்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு, 329 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in