Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM
கோயில் திருவிழாக்கள் இல்லா ததால் தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அரசு நிவாரணம் தரக்கோரி தெருக்கூத்து ஆடியபடி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரத்தையும், வாழ்வை யும் இழந்தவர்கள் பலர். இதில் மோசமான நிலையில் கிராமப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு நிவாரணமாக தருவதாக அறிவித்த ரூ.3 ஆயிரமும் இதுவரை கிடைக்கவில்லை. கரோனாஊரடங்கால் அனைத்து கோயில் களிலும் திருவிழாக்கள் ஏதும் நடக்கவில்லை. இதனால் தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் தங்களுக்கு அரசு நிவாரணம் தரக்கோரி தெருக்கூத்து கலைஞர்கள் நூதன முறையில் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தெருக்கூத்து ஆடியபடி தங்கள் கலைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து நிவாரணம் தர வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT