விருதுநகர் புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு :

எம்.மனோகர்
எம்.மனோகர்
Updated on
1 min read

இவரது சொந்த ஊர் சேலம். அங்குள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுநிலை வேதியியல் பட்டமும் பெற்றவர். சென்னையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1988-ல் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டத்தில் டிஎஸ்பியாகப் பணியைத் தொடங்கினார்.

பின்னர், மதுரை மாவட்டம் மேலூர், விழுப்புரம், போடி டிஎஸ்பியாகவும், திண்டுக்கல், மதுரையில் மதுவிலக்குப் பிரிவு கூடுதல் எஸ்.பி.யாகவும், சென் னையில் இணை ஆணையராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி உயர்வு பெற்றார். ஈரோடு, கடலூரில் எஸ்.பி.யாகவும், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு சிறப் புக் காவல் படை துணை கமாண்டண்ட், சென்னையில் காவலர் நலன் எஸ்.பி.யாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in