Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

மஞ்சளாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிராக வழக்கு : அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மஞ்சளாறு குறுக்கே தடுப் பணைகள் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த சண்முகநாதபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித் துள்ளதாவது:

மஞ்சளாறு அணை கொடைக் கானல் மலையில் உற்பத்தி ஆகிறது. தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக 1968-ல் மஞ்சளாறு அணை கட்டப்பட்டது.

இந்த அணை தண்ணீரால் திண்டுக்கல், தேனி மாவட் டங்களில் 5,259 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

மஞ்சளாறு அணையிலிருந்து ஆலங்குளம் வரை 9 சிறிய அணைகள், 7 குளங்கள் உள்ளன. மேலும் 3 தடுப்பணைகள் கட்ட அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஞ்சளாறு குறுக்கே தடுப் பணைகள் கட்டுவதால் பழைய ஆயக்கட்டுதாரர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, மஞ்சளாறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர் வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக பொதுப்பணித்துறை செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டு, மஞ்ச ளாறு அணை தொடர்பான பிற வழக்குகளுடன் சேர்த்து விசார ணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x